தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று பெரியாருக்கு அஞ்சலி செலுத்தி அந்த புகைப்படத்தை வெளியிட்டார். அதன் பிறகு இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன் என்று பதிவிட்ருந்தார். இந்நிலையில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பெரியாருக்கு அஞ்சலி செலுத்திய விஜய் எம்ஜிஆர்க்கு மரியாதை செய்யாதது ஏன் என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றிய பதிவில்

அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்.

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்……??? பெரியாருக்கு அஞ்சலி செலுத்திய தவெக தலைவர் சகோதரர் திரு.விஜய் அவர்கள் மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினமான இன்று ஏன் அஞ்சலி செலுத்தவில்லை…? டெல்லியில்… பிரதமர் அவர்கள் எந்தக் கட்சி சார்ந்தவராக இருந்தாலும் முன்னாள் பிரதமர்களின் நினைவு தினங்களில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.

அந்த வகையில் முன்னாள் முதலமைச்சர் மட்டுமல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75-ஆண்டு கால அரசியலிலும் முக்கிய பங்காற்றிய திரு.எம்.ஜி.ஆர் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அஞ்சலி செலுத்தி இருக்க வேண்டுமில்லையா ? இது ஒரு சாமானியனின் கேள்வி ?