சென்னை திருவான்மியூரில் ஹரிஹரன் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். அந்த நிறுவனத்தில் டெவலப்மெண்ட் மேனேஜராக தரணிதரன் (34) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருடைய முன்னாள் காதலியுடன் ஹரிஹரன் பழகியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ஹரிஹரன் மது குடித்துள்ளார். பின்னர் அவர் தரணிதரன் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு கீழே நின்ற் அவர் தரணிதரனுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொள்ள உன்னுடைய முன்னாள் காதலியுடன் நான் பேசுகிறேன். உன்னால் என்ன செய்ய முடியும் என கேலி செய்யும் விதமாக பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த தரணிதரன் கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தரணிதரன் அவரின் நெற்றி மற்றும் நெஞ்சில் குத்தியுள்ளார். இதில் சுருண்டு விழுந்த ஹரிகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து தரணிதரன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.