
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது அனிதாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது கொலை குறித்து அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அனிதாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது அனிதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அஜய் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவரை வேறொரு வாலிபருடன் தொடர்புபடுத்தி பேசியதால் அனிதா தன் கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி இரவில் தூங்கிக் கொண்டிருந்த தன்னுடைய கணவரை கோடாரியால் வெட்டி படுகொலை செய்துள்ளார். அதன் பிறகு மர்ம நபர்கள் வந்து தன் கணவரை கொலை செய்துவிட்டதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த அனிதாவை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தற்போது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது