தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த நீலாஞ்சனூர் கிராமத்தில் சந்தோஷ்குமார் மோனிஷா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். சந்தோஷ் குமார் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த தம்பதியினருக்கு பிறந்து 11 மாதங்களே ஆன மோகித் என்கிற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் குழந்தைக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனால் கணவன், மனைவி இருவரும் குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று மீண்டும் வீட்டிற்கு திரும்பினர்.

கடந்த 20-ஆம் தேதி மீண்டும் குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் குழந்தையை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு உடல் நலம் மோசமான நிலையில் குழந்தை பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் குழந்தை இறந்ததற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.