ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் அப்போதைய எம்.எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி முதல் கோப்பையை வென்றது. அதன் பிறகு கிட்டத்தட்ட 17 வருடங்களாக டி20 உலக கோப்பையை வெல்ல முடியாமல் இந்திய அணி தடுமாறிய நிலையில் தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று சாதித்துள்ளது. இந்தியா கடைசி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில் கடைசியில் சூரியகுமார் யாதவ் பிடித்த கேட்ச் இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் உதவியது.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தற்போது சூர்யகுமார் யாதவை பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை சூரியகுமார் யாதவையும் அவர் பிடித்த கேட்சையும் நான் மறக்க மாட்டேன். இந்த கண்ணீர் இப்போது நான் சோகமாக இருப்பதாலோ அல்லது என்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களாலோ வந்தது கிடையாது. இவை அனைத்தும் இந்திய அணி வெற்றி பெற்றதால் வந்த ஆனந்த கண்ணீர் துளிகள் என்றார். மேலும் இர்ஃபான் பதான் இதைக் கூறும்போது அவருடைய கண்கள் கலங்கியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.