
தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமி பிரசன்னா. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி திருப்பதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் மகன் உள்ளார்.
இந்த நிலையில் பிரசன்னா தனது மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் லட்சுமி தனது வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்து மகனை கவனித்து வந்தார். அதன் பிறகும் கூறியபடி மொத்த வரதட்சணை தொகையை கொடுக்கவில்லை எனக் கூறி திருப்பதியின் தாய் தொடர்ந்து லட்சுமியை துன்புறுத்தினார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த லட்சுமி கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஜாகித்யாவில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். இந்த நிலையில் வீட்டு கண்ணாடியில் அம்மா அப்பா நான் வாழ விரும்பவில்லை.
கவனமாக இரு மகனே. தயவு செய்து என் மகனை அவர்களிடம் கொடுத்து விடாதீர்கள் என்று எழுதிவிட்டு லட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் லட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் திருப்பதி மற்றும் அவரது பெற்றோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.