சென்னை சேர்ந்தவர் சரவணன். 42 வயதான இவர் பெயிண்டராக வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயசாந்தி. இவர் பிரபல துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளது. சரவணன் வெளிநாட்டில் வேலை செய்த பொழுது சம்பளத்தை மணலி புதூரில் உள்ள தன்னுடைய தங்கையின் கணவரான மற்றொரு சரவணன் என்பவருக்கு அனுப்பி வைத்தார்.

அவர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். அந்த பணத்தை விஜயசாந்தி வீட்டில் கொடுப்பதற்கு அவர் அடிக்கடி சென்று வந்ததால் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு திரும்பி வந்த சரவணன் மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து மனைவியை கண்டித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் தன்னுடைய காதலை தொடரும்படி மெக்கானிக் சரவணன் விஜய் சாந்தியை வற்புறுத்தியுள்ளார்.  இதனால் விரக்தி அடைந்த விஜய் சாந்தி நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இதுகுறித்த  விசாரணையில் அவருடைய வீட்டில் கடிதம் ஒன்று சிக்கிள்ளது .அதில் என் சாவுக்கு என் கணவர் சரவணன் மற்றும் என்னுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட உறவினரான சரவணன் ஆகியோர் தான் காரணம் என்று எழுதியுள்ளார். இதனை எடுத்து காவல்துறையினர் கணவர் சரவணன் மற்றும் உறவுக்கார மெக்கானிக் சரவணன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.