அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலினை கலாய்த்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், கள்ளக்குறிச்சிக்கு போகவில்லையே. எப்படி சமாளிச்சீங்க ஸ்டாலின்.? மணிப்பூருக்கே போகாமல் நீங்க சமாளிச்ச மாதிரி தான் மோடி என்று பதிவிட்டுள்ளார். அதாவது கடந்த ஆண்டு மணிப்பூரில் நடந்த கலவரத்தில் ஏராளமான மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.

அங்கு பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டபோது பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லாதது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதே போன்று கள்ளக்குறிச்சியில் சமீபத்தில் விஷச் சாராயம் குடித்ததில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் அங்கு நேரில் சென்றனர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் மட்டும் கள்ளக்குறிச்சிக்கு நேரில் செல்லவில்லை. இதற்கு எதிர்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மேலும் இந்த இரண்டு பதிவுகளையும் தொடர்பு படுத்தி தான் தற்போது மோடி மற்றும் ஸ்டாலின் புகைப்படத்தை வெளியிட்டு ஜெயக்குமார் கிண்டலாக பதிவு செய்துள்ளார்.