தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே தனக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை குவித்த கார்த்தி அடுத்தடுத்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இவர் தற்போது நலன்குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியரே என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு சர்தார் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படங்களின் சூட்டிங் முடிவடைந்த பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 படத்தில் நடிக்க இருக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்தை முடித்த பிறகு நடிகர் கார்த்தியின் கைதி 2 படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு எச். வினோத் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இதனால் தற்போது தீரன் அதிகாரம் 2 படத்திலும் கார்த்தி நடிக்க இருக்கிறார். எச் வினோத் தளபதி 69 படத்தை இயக்கி முடித்த பிறகு தீரன் அதிகாரம் 2 படத்தை இயக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் நடிகர் கார்த்தி அடுத்தடுத்து பார்ட் 2 படங்களில் நடித்து வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.