
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூடாபுரம் கிராமத்தில் ஆனந்தகுமார்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டனாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி கல்பனா(35) வீட்டு வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஆனந்தகுமாருக்கு தனது மனைவியை நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று மது குடித்துவிட்டு ஆனந்தகுமார் தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
மேலும் கட்டையால் கல்பனாவை தாக்கி அவரது தலையை சுவற்றில் பலமாக அடித்துள்ளார். இதனால் படுகாயமடைந்த கல்பனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கல்பனாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான ஆனந்த குமாரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.