கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் உயிரழப்பை வைத்து கடந்த சில நாட்களாகவே எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கபட நாடகமாடி வருகிறார் என்று கருணாஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் இதுதொடர்பாக பேசிய அவர், தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் பாஜக அரசு பிடுங்கிய போது இவர் ஒருநாளும் போராட்டம் நடத்தவில்லை.

தூத்துக்குடியில் போராடியவர்களை சுட்டுக்கொன்று விட்டு டிவியில் பார்த்து தான் தெரியும் என்று சொன்னவர் பழனிச்சாமி. பேரவையில் பல்வேறு மக்கள் பிரச்சனைக்கு மௌனமாய் இருந்த இவர் இன்று கள்ளக்குறிச்சி பிரச்சினைக்கு காவடி எடுத்து ஆடுகிறார் என்று கூறியுள்ளார்.