கிரெடிட் கார்டு மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் சூழலில், மற்றொருபுறம் அதை கவனமாக பயன்படுத்தா விட்டால் சிக்கலுக்கும் காரணமாகலாம். அண்மையில் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. SBI கார்டு ரத்துசெய்த பின்பும் வாடிக்கையாளருக்கு பில் அனுப்பியது. இந்த நிலையில் அந்நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் பல லட்சம் அபராதம் விதித்திருக்கிறது.

கிரெடிட் கார்டு ரத்துசெய்யப்பட்ட பிறகும் SBI கார்டு வாடிக்கையாளருக்கு நிலுவைத்தொகையை செலுத்தியதால் ஒரு வாடிக்கையாளர் நிறுவனம் மீது புகாரளித்துள்ளார். அதோடு நிறுவனம் தாமத கட்டண அபராதத்தையும் பில்லில் சேர்த்தது. இதுபற்றி புகாரளித்த எம்.ஜே.அந்தோணி, கடந்த 2016ம் வருடம் ஏப்ரல் 9ம் தேதிக்கு பின் எந்த விதமான கிரெடிட் கார்டு பரிவர்த்தனையும் செய்யவில்லை என்றார்.

கிரெடிட் கார்டை ரத்து செய்தபோது நிலுவைதொகை எதுவுமில்லை. அதன்பிறகு கார்டை ரத்து செய்வதற்குரிய விண்ணப்பத்தையும் நிறுவனத்திடம் கொடுத்து இருந்தார். கார்டு செப்டம்பர் 2016-ல் ரத்துசெய்யப்பட்டது. கார்டு ரத்து செய்யப்பட்ட பின்பும் வாடிக்கையாளரின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் கார்டு பில்கள் வரத் துவங்கின. இதையடுத்து நிறுவனம் அவரது பில்லை செலுத்தாதற்கான அபராத கட்டணத்தை சேர்த்து மே 18, 2017 வரை மொத்தம் ரூ.2,946 என்ற அளவிற்கு பில் அனுப்பியது.

டெல்லி நுகர்வோர் நீதிமன்றத்தில் அந்தோணி புகாரளித்திருந்தார். பில் செலுத்தி கார்டை ரத்து செய்த பிறகும் நிறுவனம் பில் அனுப்பி தொல்லை செய்வதாக வாடிக்கையாளர் நீதிமன்றத்தில் கூறினார். மேலும் SBI கார்டு வாடிக்கையாளரின் பெயரை CIBIL அமைப்பின் கடன் தவறியவர்கள் பட்டியலில் சேர்த்தது. இதனால் அவர் வேறு எந்தவொரு வங்கியில் இருந்தும் கிரெடிட் கார்டை பெறவில்லை.

கார்டு ரத்து செய்யப்பட்ட பிறகும் பில்களை அனுப்புவதும், கடன் செலுத்தாதோர் பட்டியலில் வாடிக்கையாளரின் பெயரை சேர்த்ததும் மிகப் பெரிய தவறு. அத்தகைய நிலையில் SBI கார்டுகள் மற்றும் பேமெண்ட் சேவைகளுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அபராத தொகையை 2 மாதங்களுக்குள் நிறுவனம் செலுத்தவேண்டும்.