வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக கடந்த சில நாட்களாக வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடிகர் மன்சூர் அலிகான் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரணாம்பட்டு பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான் அங்குள்ள ஒரு கறிக்கடைக்குச் சென்று கறியை வெட்ட சொன்னபோது அகிம்சைவாதியான என்னை  இம்சைவாதியாக ஆக்குகிறீர்களா  என்று கலகலப்பாக பேசி கறிகளை இரண்டு துண்டுகளாக வெட்டி சிக்கனை காட்டி ஏக் மால் தோ துக்கடா என்று நகைச்சுவையாக பேசி வாக்கு சேகரித்தார்.