இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது அதிகரித்து விட்டது. வங்கிக்குச் சென்று பணம் எடுக்கும் காலம் போய் தற்போது ஏடிஎம் மூலமாக எந்த ஒரு இடத்திலும் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்துக் கொள்ள முடிகிறது.

இந்த நிலையில் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஏடிஎம் கார்டை பயன்படுத்தி தங்களுக்கு கணக்கு உள்ள ஏடிஎம்மில் ஒரு மாதத்திற்கு 5  முறை இலவசமாக பணம் எடுக்கலாம். மற்ற வங்கி ஏடிஎம்களில் மெட்ரோ நகர வாடிக்கையாளர்கள் 3 முறையும் பிறப்பகுதிகளில் வாடிக்கையாளர்கள் 5 முறையும் இலவசமாக பணம் எடுக்கலாம். அதற்கு மேல் பணம் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 21 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.