கடலூர் மாவட்டத்தில் விஸ்வநாதன் (25) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய நண்பர் சந்திரசேகர். இவர்கள் இருவரும் சம்பவ நாளில் மதுரையிலிருந்து கொல்லம் செல்லும் முன்பதிவு இல்லா விரைவு ரயிலில் சென்றுள்ளனர். அப்போது ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இருவரும் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தனர். இந்த ரயில் திண்டுக்கல் ரயில்வே நிலையத்திற்கு வந்தது. அப்போது வேலு (33) என்பவர் ஏறினார். இவர் அவர்கள் இருவருக்கும் பின்னால் நின்று கொண்டிருந்த நிலையில் திடீரென வேலு எச்சில் துப்பியுள்ளார்.

அது  விஸ்வநாதன் மீது படவே அவர் அது தொடர்பாக வேலுவிடம் கேட்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட நிலையில் ஆத்திரத்தில் வேலு விஸ்வநாதனை எட்டி உதைத்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார். இது தொடர்பாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் தான் மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் வேலு ரயிலில் இருந்து குதித்து விட்டார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வேலு மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.