திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்து நேரடியாக விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல் உள்நாட்டு விமானங்களும் அதிக அளவு இயக்கப்படுகிறது. இதன் நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது.

அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது இரண்டு பேர் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வந்தது சோதனையில் தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இன்றி அவற்றை எடுத்து செல்ல முயன்றனர். அவர்கள் மறைத்து வைத்திருந்த கரன்சிகளின் இந்திய மதிப்பு 16.75 லட்சம் ரூபாய் ஆகும். அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து இரண்டு பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.