ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொண்ட நிலையில் தற்போது இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதல் முறையாக தென்னாப்பிரிக்க அணி இறுதிப் போட்டியில் நடப்பு தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்திய அணியுடன் இன்று மோத இருக்கிறது. இதனால் இன்று நடைபெறும் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இருப்பினும் போட்டி நடைபெறும் கென்ஷிங்டன் ஓவல் மைதானத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் சற்று கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை போட்டியினால் மழை பாதித்தல் நாளை போட்டி நடக்கும். ஒருவேளை நாளையும் மழை பெய்தால் இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும். இந்நிலையில் போட்டியில் வெல்லும் அணிக்கு பரிசு தொகை எவ்வளவு என்பது குறித்து பார்ப்போம். அதன்படி உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ‌.20 1/4 கோடி பரிசாக வழங்கப்படும். மேலும் இதே போன்று 2-ம் இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.10 1/2 கோடி பரிசாக வழங்கப்படும்.