இந்திய அணி 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. இந்த போட்டி முடிவடைந்த பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரரான விராட் கோலி, ஆல் ரவுண்டர் ஜடேஜா ஆகியோர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இருப்பினும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவோம் என்றும் கூறியிருந்தனர். இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா இன்னும் 2 ஐசிசி தொடர்களில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர்கள் விளையாடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, இந்திய அணி ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை மற்றும் இலக்கு. தற்போது இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றுவிட்டது. இதனால் எங்களுடைய அடுத்த இலக்கு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைகளை வெல்வதுதான். மேலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா அடுத்த வருடம் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவார்கள் என்று கூறினார்.