விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மைக் சின்னத்தில் போட்டியிடுகின்ற மருத்துவர் அபிநயாவை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இராதாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் பேசிய அவர், அறிவுக் கருவறையான பள்ளியில் நம்மைச் சுமக்கும் ஆசிரியர்களே வீதியில் நின்று போராடினார்கள். எங்களை படிக்க வைத்த ஐயா கருணாநிதி அவர்கள் அவருடைய மகனை படிக்க வைக்கவில்லையே. பாலியல் பலாத்காரம் என சொல்வதற்கு பதிலாக பாலியல் பலகாரம் என்கிறார். பார்த்து படிக்கவே 10 முறை தவறாக சொல்கிறார். இவர்கள் தோற்றுப் போனார்கள் என்று சாடியுள்ளார்.