மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைனில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தபோது அந்த ஐஸ்கிரீமுக்குள் மனித விரல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பி வந்தது .மேலும் இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் ஐஸ்கிரீமில் கிடந்த மனித விரல் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் அந்த மர்ம விரல் யாருடையது? என்பது தெரியவந்துள்ளது. அதாவது ஐஸ் கிரீம் ஆலையில் வேலை பார்த்து வந்த ஓம்கார் என்பவருடைய விரல் தான் அது என்று டிஎன்ஏ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. அவருடைய நடு விரல் ஐஸ்கிரீம் தயாரிக்கும் பொழுது துண்டாகி உள்ளே விழுந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக ஓம்கார் டி என் ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .மேலும் ஐஸ்கிரீம் உற்பத்தியாளர் தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்து உரிமத்தையும் ரத்து செய்திருந்தனர்.