
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்த நிலையில் பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தொடர்பாக அதிமுக சார்பாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நான் ஒரு மருந்தை சொன்னேன்.
அதை வைத்து சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் என்னை கிண்டல் செய்கிறார் ஒன்றும் தெரியாமல் இருக்க நான் ஒன்றும் ஸ்டாலின் அல்ல இப்படிப்பட்ட அமைச்சர்கள் இருக்கும் வரை நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது என்று கூறியுள்ளார்