சென்னை திருவான்மையூரில் தமிழக பாஜக சார்பாக மத்திய பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, 2025 ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் 12 லட்சம் வரை வருமான வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் குறைந்தபட்சம் 60 லட்சம் பேர் பயனடைவார்கள். தாய்மொழி தமிழில் தமிழக மாணவர்கள் இன்று பின்தங்கி உள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.

தமிழ் மொழியை சொல்லிக்கொண்டு தமிழகத்தில் அரசியல் செய்யும் திமுக இந்த ஆய்வு அறிக்கையை கண்டு வெட்கப்பட வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் வியக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அனைத்து இடங்களிலும் மரியாதை கிடைக்க கூடிய தலைவர் பிரதமர் மோடி போல் ஆளுநரும் அண்ணாமலையும் இருக்க வேண்டும் என்று முதல்வர் சொல்கின்றார். ஒரு மனுஷனுக்கு வாழ்க்கையில் எப்போது வாய் கொழுப்பு அதிகம் ஆகின்றதோ அப்போதே அழிவு ஆரம்பமாகிவிட்டதாக அர்த்தம் என்று முதல்வரை அண்ணாமலை விமர்சித்துள்ளார்.