
இன்றைய காலகட்டத்தில் முதலீடு செய்பவர்களுடைய எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது என்று சொல்லலாம். பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் கல்வி, திருமணம் என பல காரணத்திற்காகவும் முதலீடு செய்து வருகிறார்கள். இதற்கென்று எல்ஐசி அனைத்து விதமான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் மிக முக்கியமான ஒன்று ஒரு சிறிய தொகையை சேமிப்பதன் மூலமாக முதிர்வு காலத்தில் பல லட்சங்களை பெற முடியும். குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக வடிக்கப்பட்ட இந்த திட்டத்தின் முடிவு காலம் ஐந்து வருடங்கள். இந்த திட்டத்தை மூன்று மாதங்கள் முதல் 12 வயது வரையிலான குழந்தைகளின் பெயரில் வாங்கலாம்.
காப்பீட்டு தொகை 75 ஆயிரம். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் இதில் முதலீடு செய்யலாம். முதல் 25 வருடம் 20 வருடங்கள் வரை பிரிமியம் செலுத்தலாம். காப்பீடு 25 வருடங்களாக இருக்கும். குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும்போது பாலிசி வாங்கினால் 23 வயது வரை பாலிசி செல்லுபடியாகும். பிரிமியம் 18 வருடங்கள் வரை செலுத்த வேண்டும். 10 லட்சத்துக்கு பாலிசி எடுத்தால் ஒரு நாளைக்கு 171 சேமிக்க வேண்டும். மொத்த முதலீடு 10.89 லட்சமாக இருக்கும். உங்களுடைய மகனுக்கு 25 வயது ஆன பிறகு 28.24 லட்சம் கிடைக்கும்.