மதுவிலக்கு அமலாக்க திருத்த சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த இதுவரை 65 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் இந்த தீர்த்த சட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர், இனிமேல் எங்காவது கள்ளச்சாராய உயிர் பலியை நடக்குமானால் அதற்கு அந்த மாவட்ட காவல்துறை அதிகாரியும் எல்லைக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரியும்தான் பொறுப்பேற்க வேண்டும். கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பிறகு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பி.க்கள் ஆய்வுக் கூட்டத்தில் இது தொடர்பாக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளேன் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.