
மராட்டிய மாநிலத்தில் புனே நகர் என்னும் பகுதியில் அவிராஜ் காரத் (22) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில் அந்த இளம் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டியுள்ளார். ஆனால் அதற்கு விருப்பமில்லாத அந்தப் பெண் திருமணத்திற்கு மறுத்துவிட்டார்.
இந்நிலையில் கோபமடைந்த அவிராஜ் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திட்டமிட்டு அந்த இளம் பெண்ணை கொலை செய்தார். அதன் பின் அவிராஜ் தலைமறைவானார். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து தலைமறைவான வாலிபரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் தற்போது அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.