
இன்றைய காலகட்டத்தில் முதலீடு செய்பவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை இப்போதிலிருந்தே சேமிக்க தொடங்கி வருகிறார்கள். குழந்தைகளுடைய கல்வி, திருமணம் என பல காரணத்திற்காக முதலீட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கென்று எல்ஐசி அனைத்து விதமான சிறப்புத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று ஒரு சிறிய தொகையை சேமிப்பதன் மூலம் முதிர்வு தொகையை லட்சங்களில் பெற முடியும்.
குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து வருடங்கள். இதில் மூன்று மாதங்கள் அல்லது 12 வயது வரை குழந்தைகளுடைய பெயர்களில் காப்பீடு வாங்கலாம். இதில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 75 ஆயிரம். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். 25 ஆண்டுகள் இந்த திட்டம் முடிவடையும். அதாவது 20 ஆண்டுகள் வரை பிரிமியம் செலுத்த வேண்டும் . காப்பீடு 25 ஆண்டுகளுக்கு இருக்கும். குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும் போது பாலிசி வாங்குவதனால் 23 வயது வரை இந்த பாலிசி செயல்பாடு ஆகும். 18 வருடங்கள் பிரீமியம் செலுத்த வேண்டும். 10 லட்சத்துக்கு பாலிசி எடுத்தால் ஒரு நாளைக்கு 171 சேமிக்க வேண்டும். மொத்த முதலீடு 10.89 லட்சம் 25 வருடங்களுக்குப் பிறகு 28.24 லட்சம் பணம் கிடைக்கும்.