அரசு அல்லது தனியார் துறையில் பணிபுரிபவர்கள் ஓய்வு பெற்றவுடன் மாதாந்திர ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு திட்டம்தான் எல்ஐசியின் சாரல் பென்ஷன் திட்டம். இந்த திட்டத்தில் ஒரே ஒருமுறை முதலீடு செய்து மாதம் அல்லது வருடம்தோறும் ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளலாம். 40 வயதுக்குட்பட்டவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது.

ஒருவர் 10 லட்சத்தை முதலீடு செய்தால் அவருக்கு 50 ஆயிரம் வருடாந்திர ஓய்வூதியம் கிடைக்கும். 20 லட்சம் முதலீடு செய்தால் ஆண்டுக்கு ஒரு லட்சம் ஓய்வூதியம் கிடைக்கும். 30 லட்சம் முதலீடு செய்தால் வருடத்திற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும் .தேவைப்படும் நேரத்தில் கடனும் பெற்றுக் கொள்ளலாம்