தூத்துக்குடி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 6 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். அப்போது இவருக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த கண்ணன் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டது. இதேபோன்று எதிர்வீட்டைச் சேர்ந்த மாதவன் என்பவர் உடனும் அவர் தகாத உறவு வைத்துக்கொண்டார். ஒரே நேரத்தில் அவர்  இருவருடன் தகாத உறவில் இருந்த நிலையில் இருவருக்கும் தெரியாமல் ஒருவரை ஒருவர் சந்தித்து  தனிமையில் உல்லாசமாக இருந்தார். ஒரு கட்டத்தில் இந்த உண்மை கண்ணனுக்கு தெரிய வந்தது. இதில் கண்ணன் மற்றும் மாதவனுக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் மாதவன் பெண்ணிடம்  கண்ணனுடன் தகாத உறவை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு பெண் மறுப்பு தெரிவித்த நிலையில் தொடர்ந்து கண்ணனுடன் பழகி வந்தார்.

அந்த வகையில் சம்பவ நாளில் கண்ணனுடன் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்த இளம் பெண் பின்னர் மாதவன் வீட்டிற்கு சென்றார். இதில் ஆத்திரம் அடைந்த மாதவன் கண்ணன் வீட்டிற்கு சென்று அவருடன் தகராறு செய்து கோபத்தில் கத்தியால் குத்தினார். இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் தடுக்க வந்த இளம் பெண்ணையும் அவர் கத்தியால் குத்தினார். இதில் இளம்பெண் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த கண்ணனுக்கு திருமணமாகி இரு மகள்கள் மற்றும் இரு மகன்கள் இருக்கிறார்கள். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாதவனை கைது செய்தனர். மேலும் பெண் ஒருவர் ஒரே நேரத்தில் இருவருடன் தகாத உறவு வைத்ததால் ஏற்பட்ட விபரீத சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.