மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே மருத்துவமனையில் 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சத்திரபதி சிவாஜி மருத்துவமனையில் கடந்த மாதத்தில் மட்டும் 21 பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

அதே மருத்துவமனையில் நடைபாண்டில் மொத்தம் 110 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. ஜனவரி மாதம் 17, பிப்ரவரி 10, மார்ச் மாதம் 22, ஏப்ரல் மாதத்தில் 24, மே மாதத்தில் 16 மற்றும் ஜூலை மாதத்தில் தற்போது வரை இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதற்கு யார் பொறுப்பு? என்று அம்மாநில காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.