ஈரோடு மாறாட்டம்  மேற்கூரை என்னும் பகுதியில்  பழனிச்சாமி- அமுதா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர் . இவர்களுக்கு புவனேஸ்வரி என்ற ஒரு மகள் இருக்கிறாள். அதன் பிறகு பழனிச்சாமியின் தங்கை மகளான சந்தியாவும் அவர்களுடைய வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்த  நிலையில் தேர்வில் தேர்ச்சி பெறாத காரணத்தால் அவர்களுடைய வீட்டில் தங்கி உள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் தையல் வேலை பழக சென்று வந்துள்ளார்.அப்போது பபுவனேஸ்வரி சந்தியாவை வீட்டு வேலைகள் சரியாக பார்ப்பதில்லை என திட்டி இருக்கிறார். இதனால் வேதனை அடைந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பழனிசாமி குடும்பத்தினர் அருகில் இருந்தவர்கள் உதவியோடு சந்தியாவை மீட்டு  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அங்கு சந்தியாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.