கேரள மாநிலம் எர்ணாகுளம் மற்றும் ஜார்கண்ட் மாநில தாடா நகர இடையே எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயிலில் 20 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. இதில் நேற்று 10500-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்த நிலையில் காலை 10 மணி அளவில் வல்லத்தோடு ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது அங்குள்ள பாலத்தை ரயில் கடந்து செல்ல வேண்டி இருந்தது.

அதனால் ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு மிதமான வேகத்தில் இயக்கப்பட்ட போது எதிர்பாராத விதமாக ரயில் என்ஜினில் இருந்து பெட்டிகள் திடீரென கலன்று தனியாக சென்றது. உடனே நிலைமையை உணர்ந்த என்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தினார். பெட்டிகள் சிறிது தூரம் சென்று தானாக நின்று விட்டன. ரயிலின் வேகம் குறைவாக இருந்ததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.