கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை சட்டக் கல்லூரியில் படித்து வரும் நிலையில் இவர் நேற்று அதிகாலை மங்களூர் மெயில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை நோக்கி வந்துள்ளார் .அப்போது வாலிபர் ஒருவர் ரயிலில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த வாலிபர் அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு அருகில் உள்ள பெட்டிக்கு ஓட முயற்சித்துள்ளார். அப்போது மாணவி அவரை சக பயணி ஒருவரின் உதவியோடு விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்துள்ளார்.

இது குறித்து வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவருடைய பெயர் சஜன் வயது 28 என்பதும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவர் குடும்பத்தோடு சட்டக் கல்லூரி மாணவி பயணித்த பெட்டிக்கு அருகில் உள்ள மற்றொரு பெட்டியில் பயணம் செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து பாலியல் தொல்லை தொடர்பாக அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.