உத்தரகாண்டில் உள்ள பேருந்து நிலையத்தில் கடந்த 13-ம் தேதி 16 வயது சிறுமி ஒருவர் மிகவும் சோர்வுடன் தனியாக அமர்ந்திருந்தார். இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த அங்கிருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தைகள் நலக்குழுவினர் உதவியோடு அவரை மீட்டு சென்றனர்.

அதன் பின் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர் எதுவும் பேசவில்லை. இதனால் அவருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர் தன்னை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து விட்டது என்று கூறினார்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் குழந்தைகள் நலக்குழுவினர் புகார் அளித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த சிறுமி பஞ்சாப் மாநிலம் மொரதாபாத் என்ற பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

அவர் பஞ்சாபில் இருந்து டெல்லி சென்று விட்டு, பின் மொரதாபாத்துக்கு  திரும்பியுள்ளார். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் வைத்து அந்த குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதில் பஸ் கண்டக்டர், டிரைவர் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தேடி வருகின்றனர்.