மெக்சிகோவில் இருக்கும் தேவாலயம் ஒன்று சொர்க்கத்தில் உள்ள மனைகள் ஒரு சதுர அடி சுமார் 8,336 என்ற கணக்கில் விற்பனை செய்து வருவது அனைவருடைய அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மெக்சிகோ நாட்டின் இக்லேசியா டிஎம்போஸ் என்ற தேவாலயத்தில் நடந்த இந்த விற்பனையால் மில்லியன் கணக்கான டாலர்கள் தேவாலயத்திற்கு வந்து குவிந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தேவாலயத்தின் பாதிரியார் 2017 ஆம் வருடம் கடவுளை சந்தித்தார் என்றும் அப்போது சொர்க்கத்தில் உள்ள மனைகளை விற்பனை செய்ய அவருக்கு கடவுள் அங்கீகாரம் அளித்தார் என்றும் கூறி இந்த தேவாலயம் விற்பனையில் இறங்கி இருக்கிறது.

தங்களுடைய செல் ஃபோன் மூலமாகவே ஆன்லைனில் பணத்தை செலுத்தலாம் என்றும் விளம்பரப்படுத்தி உள்ளது. சமூக வலைதளத்தில் தீவிரமாக இயங்கி வரும் இந்த தேவாலயம் விளையாட்டாகத்தான் இதை வியாபாரத்தை தொடங்கியது. ஆனால் இதை சீரியசாக எடுத்துக் கொண்ட பக்தர்கள் சொர்க்கத்தில் உள்ள மனைகளை வாங்கி குவித்து வருகிறார்கள். இது தொடர்பான வீடியோ இணைத்து வெளியாகி வருகிறது.