
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2014 இல் முழு மெஜாரிட்டி பெற்றது. பிறகு 2019 ஆம் ஆண்டு அசுர பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் முழு மெஜாரிட்டி பெறவில்லை. கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளை அரவணைத்து தான் ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி முழு மெஜாரிட்டி பெறாதது குறித்து” கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம்”என்ற தலைப்பில் நீலகிரி திமுக எம்பி ஆ.ராசா வெளியிட்டுள்ள பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரகாகி வருகிறது.
கடவுள் குழந்தையின்
கைகளில் பிச்சை பாத்திரம் !அட்சயப்பாத்திரத்தோடு
ஆந்திராவும் பீகாரும் ;கடவுளை மற
மனிதனை நினை !பெரியார் வாழ்கிறார் !!@arivalayam @dmk_youthwing @DMKITwing
— A RAJA (@dmk_raja) June 5, 2024