பிரபலமான சினிமா மேக்கப் கலைஞர் ஹேமா. இவர் வட இந்தியாவில் பிரபலமான சினிமா மேக்கப் கலைஞராகவும் சிகை அலங்கார நிபுணராகவும் இருக்கும் நிலையில் சினிமா நடிகைகளுக்கு மேக்கப் போட்டு வருகிறார். இவர் தனக்கு நேர்ந்த ஒரு கசப்பான அனுபவம் குறித்து தற்போது பேசியுள்ளார். அதாவது நடிகை அமலாபால் சென்னையில் ஒரு படப்பிடிப்பில் இருந்துள்ளார். அவருடன் மேக்கப் போடுவதற்காக ஹேமா உள்ளிட்ட சிலர் சென்றுள்ளனர். அது ஏப்ரல் மற்றும்மே  மாதம் என்பதால் கடுமையான வெப்பம் இருந்துள்ளது. அந்த படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் ஒதுங்குவதற்கு மரத்தின் நிழலோ அல்லது வேறு எந்த இடமோ இல்லை. இதனால் கேமா உட்பட சிலர் கேரவனுக்குள் சென்று அமர்ந்துள்ளனர்.

அப்போது நடிகை அமலா பால் தன்னுடைய மேனேஜர் மூலம் அவர்களை அங்கிருந்து இறங்கி செல்லுமாறு கூறியுள்ளார். அவர்கள் வெயில் அதிகமாக இருப்பதாக கூறியுள்ளனர். இருப்பினும் அதை அமலா பால் கேட்காமல் தன் மேனேஜர் மூலம் அவர்களை இறங்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். நாங்கள் இவ்வளவு வெயிலில் எங்கு போய் நிற்பது என்று யோசித்தோம். இருப்பினும் நாங்கள் இறங்கும் வரை அவர் விடவில்லை. இதனால் வேறு வழியின்றி இறங்கி வந்து விட்டோம். இதுபோன்ற சம்பவங்கள் அவர் மூலம் எனக்கு நிறைய நடைபெற்றுள்ளது. நாங்கள் வட இந்தியாவில் தபு போன்ற பெரிய ஸ்டார் நடிகைகளுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளோம். எங்களைப் போன்றவர்களுக்காக நடிகை தபு அவரே வேனை புக் செய்து எங்களை நன்றாக பார்த்துக் கொள்வார் என்று கூறினார். மேலும் நடிகை அமலாபால் பற்றி ஹேமா கூறியது தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.