
நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் நான்காவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல் மற்றும் லக்னோ சூப்பர் ஜான்ஸ் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டெல்லி கேப்டன் அக்சர் பட்டேல் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங்க் செய்து 20 ஓவர் எட்டு விக்கட்டுகள் இழந்து 29 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு களமிறங்கிய டெல்லி அணியானது 19.3 ஓவர்களின் 211 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது .இந்த நிலையில் லக்னோ அணியின் பேட்டிங்கில் நிக்கோலஸ் பூரன் 30 பந்துகளில் 75 ரன்கள், மிட்செல் மாஸ் 36 பந்துகளில் 72 ரன்களும் எடுத்தார்கள்.
மேலும் டெல்லி அணியிலிருந்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸுடன் 48 ரன்களும் விப்ராஜ் நிகம் 55 48 ரன்கள் எடுத்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். அதன்பிறகு கடைசியில் களமிறங்கிய டெல்லி அணியின் இம்பாக்ட் பிளேயரான அஷுதோஷ் சர்மா 31 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் டெல்லி அணியை வெற்றி பெற வைத்தார். இந்நிலையில் இந்த வெற்றிக்கு குறித்து டெல்லி அணி வீரர் அஷுதோஷ் சர்மா பேசுகையில், “கடைசி ஓவரில் நான் பதற்றமாக இருந்தேன் . மோகித் சர்மா சிங்கிள் எடுத்து எனக்கு ஸ்ட்ரைக் கொடுத்தால் சிக்ஸர் விளாசி போட்டியை முடிக்க வேண்டும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டே இருந்தேன். எனக்கு என் மேல் நம்பிக்கை இருந்தது. என் விளையாட்டை நான் மிகவும் ரசித்தேன். என்னுடைய கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது” என்று கூறியுள்ளார்.