மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.  இந்நிலையில்  பாஜக அமைச்சர் நாராயண சிங்க் குஷ்வாஹா, சமீபத்தில் ஆண்கள் குடிப்பழக்கத்தை கைவிடுவதற்கு வினோதமான ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது கோபாலில் அது மற்றும் போதை பொருள் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் .அப்போது பேசிய அவர், தாய்மார்களும், சகோதரிகளும் தங்களுடைய கணவன்மார்கள் குடிப்பதை கைவிட வேண்டும் என்று விரும்பினால் அவர்களிடம் முதலில் வெளியே போய் குடிக்க வேண்டாம் வீட்டிற்கு வாங்கி வந்து என் முன்னால் குடியுங்கள் என்று சொல்லுங்கள்.

இதனால அவர்கள் படிப்படியாக குடியை முற்றிலுமாக கைவிட்டு விடுவார்கள். உங்களை பார்த்து நம்முடைய பிள்ளைகள் குடிக்க பழகிவிடும் என்று என்பதை நியாயப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.  இந்த பேச்சுக்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது.