திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே சோரகுளத்தூர் கிராமத்தை சேர்ந்த போலீஸ்காரரான அஜித்குமார் என்பவர் புதுச்சேரி பகுதியை சேர்ந்த திவ்யபாரதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சர்வேஷ் என்ற ஒரு வயது மகன் உள்ளார். தற்போது திவ்யபாரதி நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி அஜித்குமார் திடீரென்று பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் திவ்யபாரதி கடந்த இரண்டு நாட்களாக கணவரை பிரிந்த மனவேதனையில் இருந்ததால் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.