
இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயனடையும் விதமாக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தனித்தனி திட்டங்கள் செயல்பாட்டில் இருந்து வரும் நிலையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம். 60 ஆண்டுகள் நிறைவடைந்தால் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்தால் மாதம்தோறும் 10000 ரூபாய் பெறலாம். இதற்கு மாதம் தோறும் ப்ரீமியம் செலுத்த வேண்டும். இந்த திட்டம் குறித்த முழுமையான விவரங்களை அறிய https://www.india.gov.in/spotlight/atal-pension-yojana என்ற இணையதளத்தை அணுகவும்.