
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜெய்சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுசல்யா என்னும் ஒரு மகள் உள்ளார். ஜெய்சங்கர் தனது மகளை பெருமங்கலத்தைச் சேர்ந்த பச்சமுத்து என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதில் பச்சமுத்து அடிக்கடி கவுசல்யாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கவுசல்யா பச்சமுத்துவை பிரிந்து அவருடைய தாயார் வீட்டில் கடந்த 1 1/2 வருடங்களாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவ நாளன்று கவுசல்யா தனது மகளுடன் வெளியே சென்ற நிலையில் வீட்டிற்கு திரும்பவில்லை. பின்பு ஜெய்சங்கர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கவுசல்யாவையும் அவரது குழந்தையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.