
கேரள மாநிலத்தில் மருதன்-மஞ்சு (38) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய மகளுக்கு பிறப்பு சான்றிதழை வாங்குவதற்காக கோவைக்கு வந்துள்ளனர். இவர்கள் நேற்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மஞ்சு எழுந்து படிக்கட்டுக்கு அருகே வந்தார். அந்த பேருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் அருகே வரும் போது திடீரென மஞ்சு பேருந்தில் இருந்து கீழே குதித்து விட்டார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக பயணிகள் மற்றும் அருகில் இருந்தவர்கள் மஞ்சுவை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மஞ்சுவிடம் விசாரணை நடத்தியதில் தன்னுடைய கணவர் கீழே இறங்கி விட்டதாக நினைத்து பேருந்தில் இருந்து குதித்ததாக கூறியுள்ளார். மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.