ஜெர்மனியில் யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நள்ளிரவு போட்டியில் போர்ச்சுக்கல்-ஸ்லோவேனியா அணிகள் மோதியது. இதில் ஸ்லோவேனியாவை வீழ்த்தி போர்ச்சுக்கல் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த போட்டியில் பெனால்டி கோல் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் போர்ச்சுக்கல் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் தன்னுடைய முதல் கோலை போர்ச்சுக்கல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடிக்க முயன்றார். இந்த கோலை ஸ்லோவேனியா கோல் கீப்பர் தடுத்து நிறுத்தினார். இதனால் அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக பெருகிய நிலையில் சுதாரித்துக் கொண்டு அடுத்த கோலை ரொனால்டோ சிறப்பாக அடித்து வெற்றிக்கு வித்திட்டார். மேலும் தன்னுடைய முதல் கோலை அவர் மிஸ் செய்ததால் மைதானத்தில் தேம்பி தேம்பி அழுதார். அவரை சகவீரர்கள் தேற்றினர். இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.