
தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்கியா, திருச்சிற்றம்பலம், அரண்மனை 4 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. சினிமாவில் கதாநாயகர்களுக்கு அதிக சம்பளமும், தங்களுக்கு குறைவான சம்பளமும் கொடுப்பதாக தொடர்ந்து நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வெற்றி பெறுவதால் கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என தொடர்ந்து நடிகைகள் கூறி வருகின்றனர்.
அந்த வகையில் ராஷி கண்ணா சினிமாவில் சம்பள விஷயத்தில் நிறைய பாகுபாடு உள்ளது. காலம் மாறும் போது அதிலும் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பேய் படங்களில் நடிப்பது சுலபம். ஆனால் இயக்குவது கஷ்டம். ஏற்கனவே தமிழில் திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய படங்களில் நடித்தேன். அந்த படங்கள் வெற்றி பெற்றது. இப்போது அரண்மனை 4 படமும் வெற்றி பெற்றது சந்தோஷமாக இருக்கிறது. ஏற்கனவே எனக்கு ஹிந்தி தெரியும். இப்போது தமிழ், தெலுங்கு மொழிகளை புரிந்து கொண்டு என்னால் பேச முடிகிறது என கூறியுள்ளார்.