
கனமழை பெய்யும் போது நிலைமைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து மேலாண் இயக்குநர்களுக்கு, துறை செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சாலையில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என்பதை கவனிக்கவும், பிற வாகனங்கள் செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இடைவெளி விட்டு செல்ல வேண்டும் உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.