
கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் அண்ணாமலையை தனது அரசியல் வாரிசாக அறிவித்திருப்பாரென நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாஜகவில் இணைந்த அவர் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், எம்.ஜி.ஆர், ஜெ., மேல் மக்களுக்கு வந்த நம்பிக்கை போல அண்ணாமலை மேல் நம்பிக்கை வந்திருப்பதாகவும், இந்தி திணிப்பு என சொல்லி ஓட்டு போடவேண்டாமென்று சொல்லும் திமுகவினரின் பிள்ளைகள் இந்தி படித்து வருவதாகவும் சாடியுள்ளார்.