உத்திரபிரதேச மாநிலம் தாதியா மாவட்டம் சோனகிரி பகுதியைச் சேர்ந்தவர் காஜல். 22 வயதான இவருக்கும் ஜான்சியை சேர்ந்த ஜார்ஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் திருமணத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக அலங்காரம் செய்து கொள்ள மணப்பெண் காஜல் பக்கத்தில் உள்ள அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கே வந்த மணப்பெண் காஜலின் முன்னாள் காதலால் தனிராம் அவரை தன்னோடு வரும்படி அழைத்துள்ளார்.

அப்போது காஜல் அவரோடு செல்ல மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்த நிலையில் கோபமடைந்த தனிராம் கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி தப்பி ஓடிய காதலன் தனிராமை தேடி வருகிறார்கள்.