திருச்சி மாவட்டம் ஏர்போர்ட் வசந்த் நகரை சேர்ந்தவர் நாசர் அலி. இவர் கேகே நகரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. நேற்று முன்தினம் நாசர் அலி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தனது நண்பரான வேலுமணி என்பவருடன் இணைந்து அந்த பெண்ணின் 5 வயது மகனை காரில் கடத்தி சென்றுள்ளார்.

இதனையடுத்து நாசர் அலியும், வேலு மணியும் இணைந்து அந்த சிறுவனை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்தனர். பின்னர் சிறுவனை அடித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த சிலர் இருவரையும் பிடிக்க முயன்ற போது நாசர் அலி மட்டும் சிக்கிவிட்டார்.

வேலுமணி தப்பித்து சென்றார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று நாசர் அலியை கைது செய்து தப்பியோடிய வேலுமணியை தேடி வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.