கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ள சாராயம் விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பலி எண்ணிக்கை தற்போது ஏழாக அதிகரித்துள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் 23 உயிர்களைப் பறித்த மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம் நடந்த ஒரு ஆண்டில் கள்ளக்குறிச்சியில் மீண்டும் அதே போன்ற சம்பவத்தில் ஏழு பேர் பலியானதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். கள்ளச்சாராய வியாபாரிகளுடன் அமைச்சர் மஸ்தான் தொடர்பில் இருப்பது தெரிந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மஸ்தானையும் விற்பனையை தடுக்காத அமைச்சர் முத்துசாமியையும் பதவி நீக்கும்படி அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.