கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் விஷ சாராயம் அருந்தி 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் 11 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மெத்தனாலை பன்சிலால் மற்றும் கௌதம் ஆகிய இருவரும் வெளிமாநிலத்தில் இருந்து வாங்கியதும் அதில் நீரை கலந்து விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது. வழக்கு விசாரணைக்காக இதுவரை யாருக்கும் சம்மன் அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.